மெசோ
என்ற கிரேக்கச்சொல்லிற்கு இடைப்பட்ட பகுதி, அல்லது நடுவில் உள்ள பகுதி என்று
அர்த்தம். பட்டோமி என்றால் நதிகள் என்று
அர்த்தம். மெசப்பட்டொமியா என்பது ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதி என்று அர்த்தம்.
(கரெக்ட்.. இப்பத்தான் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்.. பாட்டுக்கேட்டேன்) இந்த மொசப்பட்டோமியாவில் வாழ்ந்த 'கருந்தலையர்கள்' என்று அக்தாத் இன மக்களால் அழைக்கப்பட்ட சுமேரியர்களுக்கு.. உண்மையில் சுமேரிய
மொழியின்படி பிரபுக்கள் போல வாழ்ந்தவர்கள் என்று அர்த்தம்.
சுமேரியர்களுக்கு
அடிப்படையாக மூன்று தொழில்கள் இருந்தன. மீன்பிடித்தல், கால்நடைகளை மேய்த்தல்
மற்றும் விவசாயம். (வியாபாரம் எல்லாம் இந்த முத்தொழில்களை ஒட்டி நடைபெற்றவையே. அது
பிரதான தொழிலாக அங்கீகரிக்கப்பட வில்லை ) இந்த முத்தொழில்களிலும் முக்கியத்
தொழிலாகக் கருதப்பட்டது விவசாயமே.
நாம்
ஏற்கெனவே பார்த்தபடி மொசபடோமிய பகுதிகளில் ஆண்டிற்குப் பெய்யும் பருவமழையளவு
மிகவும் குறைவு. ( சென்னைவாசிகள்.. அப்ப மொசபடோமியாவுக்கு குடி போய்டலாம்னு
நினைக்காதீங்க. நான் சொல்லறது இன்றிலிருந்து ஏறக்குறைய ஏழாயிரம் எட்டாயிரம்
ஆண்டுகளுக்குகு முன்பு) எனவே, சுமேரியர்கள் நதிகளின் பயன்பாட்டில் தான் விவசாயம்
மேற்கொண்டனர் என்பது புரியக்கூடியதுதான்.
நதிகளின்
குறுக்கே தடுப்பணைகள்கட்டி ஆண்டு முழுவதும் விவசாயத்திற்கு நதிநீரைப் பயன்படுத்தினர்
என்பது எவ்வளவு பொறியில் கணக்குகளின் பாற்பட்டது என்பதும், அதை அன்றே அவர்கள்
அறிந்திருந்தனர் என்பதுதம் தான் சுமேரியர்களை சுமார் இயர்கள் என கொள்ளாமல் உலகம்
வியந்து பார்க்கிறது. மண்பாண்டங்களின் பயன்பாடு மிகமுழுமையடைந்ததும்
சுமேரியர்களின் நாகரீகத்தில் தான். கற்காலம் முடிந்து, உலோகபயன்பாட்டுக்காலம்
வளர்ந்து, எளிதில் கையாளக்கூடிய மண்பாண்டங்களையும், உலோகத்தாலான வேட்டையாடும்,
மற்றம் விவசாய கருவிகளையும் சுமேரியர்கள் கண்டறிந்திருந்தனர்.
ஏர்,
கலப்பை, ஏற்றம் போன்ற உபகரனங்களையும் அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். விலங்குகளை
வேளாண் வேலைகளுக்குப் பயன்படுத்துதல் போற்ற பல கலைகளையும் அவர்கள் தெரிந்து
வைத்திருந்தனர்.
சக்கரங்களின்
பயன்பாடானது, வண்டி வாகனங்களில் மட்டுமின்றி, மனித வேலைகளைச் சுலபமாகச் செய்யவும்
பயன்படுவதாக அவர்கள் செய்துவைத்திருந்தனர். இருசும் கப்பியும் நீரேற்றி
இறைப்பதற்காகவும், மண்பாண்டங்கள் செய்யும் அடிச்சக்கரமாகவும் அவர்கள்
சக்கரத்தினைப் பயன்படுத்தினர்.
ஆற்றங்கறைகளில்
வேளாண்மை என்பதால் பரவலாக கிராமங்கள் மலிந்த பகுதியாகத்தான் மெசபடோமியா இருந்தது.
ஆயினும் பல நவநாகரீக நகரங்களையும் அவர்கள் கொண்டிருந்தனர். இந்த
நகரங்களில்தான் அரசர்கள் இருந்தனர். ஒவ்வொரு நகரும் ஒரு காவல் தெய்வத்தையும்
கொண்டிருந்தது. அரசர்கள் அந்த காவல்தெய்வங்களின் பிரதிநிதிகளாக நகரத்தை ஆட்சி
புரிந்தனர். மக்களும், சட்டமும், அரசர்களும் அந்த காவல்தெய்வங்களின் தெய்வீகசக்திக்கு
கட்டுப்பட்டவர்களாக இருந்தனர். இவ்வாறு கிட்டத்தட்ட பத்திற்கும் மேற்பட்ட நிர்வாக
மையங்களான நகரங்கள் இருந்தன. இவற்றிற்கு
எட்டாவது
ஊரின் பெயரைக் கவனித்தீர்களா? அந்த ஊரின் பெயர் ஊர். எந்த மாற்றமும் இல்லாமல்
தமிழ்ப்பெயரை ஒத்து வருகிறதல்லவா?
இப்படிப்பட்ட
ஊரின் தெய்வங்களும் நமது பண்பாட்டை ஒட்டியே வருகின்றன. அவர்கள் படைக்கும் தெய்வம்,
காக்கும் தெய்வம், போர் முதலான அழிக்கும் தெய்வம் என ஆண் தெய்வங்களை பிரதான
தெய்வமாக வணங்கினர். நமது பிரம்மா, விஷ்ணு, சிவன் போல.
வீரத்தின்
உருவாமகவும், அறிவின் அடையாளமாகவும், செல்வத்தின் சேரிடமாகவும் பெண் தெய்வங்களை
வணங்கினர். இது நமது சக்தி, சரஸ்வதி, லட்சுமி போன்றதாகும்.
மேலும்
பல புராண கதைகளும் சுமேரிய வழக்கில் இருந்தது. இந்தக்கதைகளில் எல்லாம் தீய
சாத்தான்களின் சக்தியிலிருந்து தெய்வங்கள் மக்களைக் காத்த கதைகள் பல உள்ளன. இந்த
தீய சாத்தான்களும் தத்தமக்கான சக்திகளை தெய்வங்களிடமிருந்தே ஆசீர்வாதமாகப் பெற்றன
என்ற விசயம் கூட நமது புராணக்கதைகளை ஒத்ததாகவே இருக்கிறது.
அண்ணா. அண்மையில் 'குமரிக்கண்டமா சுமேரியமா?' என்றொரு புத்தகத்தைப் படித்தேன். தமிழர்கள் சுமேரியாவிலிருந்து பெயர்ந்து வந்தவர்கள் என்று புவியியல், இலக்கியம் மற்றும் புராணத் தரவுகளைக் கொண்டு வாதிடுகிறது அந்நூல்.
ReplyDelete