Saturday, September 26, 2015

நிபிரு Nibiru

கடவுள் வழிபாட்டினை தீர்க்கமாக நம்பி வழிபட்ட ஆதிக்குடிகளுள் மாயன்கள் முக்கியமானவர்கள். அவர்கள் தங்கள் கணிதத்தையும் காலண்டரையும் கூட ‘இட்சாம்னா’ எனப்படும் ‘காலத்தின் கடவுள்’ தங்கள் முன்னோர்களிடம் கொடுத்ததாகக் கருதினர்.  

இந்துக்களின் கருத்தாக்கத்தில் வரும் ‘நரகம்’ என்ற அமைப்பைப் போலவே, ‘மெட்னசு’ என்ற இருண்ட நகரம் ஒன்று இருப்பதாக, மாயன்கள் நம்பினர். மனித பாவங்களுக்கான தண்டனை அளிக்கும் அந்த நகரை ‘கூனிகா’ என்ற கொடும் தெய்வம் ஆட்சி செய்வதாகவும் கருதினர்.

அறிவியல் கூற்றின்படி, மாயன்கள் கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அமெரிக்காவில் வசித்துவந்த பழங்குடியினர் ஆவர். இவர்களுக்கு முன்பேயும் ‘சப்போட்டெக்’, ‘ஒல்மெக்’ போன்ற பழங்குடியினர் இங்கு வசித்துவந்தனர். இவர்களுக்கு சற்று அடுத்தும் மிக்சுட்டெக், அசுட்டெக் போன்ற நாகரீகங்கள் இருந்து அழிந்திருக்கின்றன. எனினும், இந்த நாகரீகங்கள் மாயன்களின் நீட்சியைக் காட்டிலும் காலத்தால் குறைந்தவை.

மேற்கூறப்பட்ட எல்லா நாகரீகங்களிலும் சற்றேறக்குறைய ஒரே மாதிரியான கணக்குவழக்குகளை (கணக்குன்னா.. ஏன் உடனே வழக்கும் வருகிறது?) உடையவை. 

மாயன்களின் காலண்டர்கள் சூரியச்சுற்றினை ஒட்டியவை மட்டும் என அறுதியிட்டுக் கூறமுடியாது. அவை எல்லாக் கோள்களையும் ஒருசேரச் சார்ந்தவை. முழுமையான விவசாயத்தை பின்பற்றிய நாகரீகங்கள் மட்டுமே உறுதியான சூரியச்சுற்று காலண்டர்களைப் பின்பற்றியவை. மாயன்கள் வேட்டையாடி வாழ்வை விட்டுவிடாதவர்கள். 

நிலவின் அடிப்படையிலான மாதங்கள் எனும் பகுப்பினை அவர்கள் கொண்டிருந்தார்களா? என்பது பற்றி சரிவரத் தெரியவில்லை. ஆனாலும், பல்வேறு கோள்களின் அடிப்படையிலான பல்வேறு சுற்றுக்களை அவர்கள் பயன்படுத்தி வந்தனர். வெள்ளி – சுக்கிரன் - கிரகத்தின் அடிப்படையிலான நாட்சுற்றுக்கள் கூட மாயன் காலண்டர்களின் உண்டு. 

மாயன்களின் ஆண்டு நீள் தன்மையைக் (Linear) கொண்டது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. (Infinite). அடுத்தடுத்து தொடரும் நாட்களைக் கொண்டது. அதாவது.. நம்மைப்போல, சென்ற ஆண்டு இந்தநேரம் என்று குறிப்பிட்டெல்லாம் அவர்கள் நாட்களை நினைவு கொள்வதில்லை. நாட்கள் முடிந்து விட்டால் முடிந்ததுதான். கதம் கதம். (பிறந்தநாட்கள் கூட கொண்டாட மாட்டார்கள் போலிருக்கிறது. டிரீட் மிச்சம்)

அடுத்தடுத்து தொடரும் நாட்களை பிரிவுகளாக பிரித்திருந்தனர். அந்தப்பிரிவுகளும் சுழற்சியில் இல்லை. தொடர்ச்சியில்தான். 260 நாட்களைக் கொண்ட சோல்க்கின் (Tzolk'in) எனும் ஆண்டுச்சுற்றும் உண்டு. ஆண்டென்பது 365 நாட்களை கொண்டதாகவும் சிற்சில கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது. 584 நாட்கள் அடிப்படையிலும், 819 நாட்களின் அடிப்படையிலும் கூட ஆண்டுகள் வெவ்வேறு குறிப்புகளில் உள்ளன. ஆனாலும், இந்த முறைகளையேதான் அவர்கள் பின்பற்றினார்களா, விழா நாட்கள் எவை எவை என்பதெல்லாம் மாயமானவை. 

மாயன்கள் ‘ஹாப்’ Haab என்ற சிறு சுற்றுக்களைப் பயன்படுத்தினர். 52 ஹாப்கள் கொண்டது ஒரு ஆண்டு. 13 நாட்களைக் கொண்ட வரிசை (சுற்று அல்ல),  20 நாட்களைக் கொண்ட வரிசை என்பதும் கூட மாயன் காலண்டரில் உண்டு. மாயன்கள் பல்வேறு கிரகங்களையும் கணக்கிட்டு, காலண்டர்கள் அமைத்தனர் எனக் கண்டோம். இந்த கிரக சேர்க்கையன் அடிப்படையில்தான் நாட்களில் சிலவற்றை ‘இருண்ட நாட்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தனர். இந்த இருண்ட நாட்கள் தான் தீமை செய்யும் என கருதினர். இந்த தீமை செய்யும் நாட்களில் தான் போர்கள் நடத்தினர். 

மாயன்களின் எண்கள் இருபதின் அடிப்படையில் ஆனவை. ( தசமத்தை பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாகிய நாம்தான் ) இந்த இருபதின் அடிப்படையிலேயே அவர்கள் சகலத்தையும் அளந்தனர். ஏற்கெனவே நாம் குறிப்பிட்டது போல, கோள்களின் இடைவெளியைக் கூட அவர்கள் துல்லியமாக அளவிட்டனர். மேலும் பூமியின் பகுதிகளையும் அவர்கள் இருந்த பிரதேசத்தில் இருந்து அளவிட்டிருந்தனர்.

அதன்படி மாயன்கள் வாழ்ந்த பிரதேசத்தில் இருந்து இவ்வளவு தூரத்தில் - அன்றைய நாளில் இருந்து இவ்வளவு நாட்களக்குப் பிறகு - இவ்வாறு நடக்கும் என இயற்கையின் சீற்றத்தால் அமையும் துர்ச்சம்பவங்களைக் குறிப்பிட்டு இருந்தனர். இவற்றைத்தான் ‘மாயன்களின் பேரழிவுக்கான கணிப்புகள்’ என்று நாம் எடுத்துக்கொண்டு, அனுபவித்து வருகிறோம்.

மாயன்களின் கோள்களைப் பற்றிய கணிப்புகளின் ஒன்றுதான் பத்தாவது கிரகம் (10th Planet.) எனக் கருதப்படும் “நீபுரு“ ஆகும். கிறது. இந்தக் கோள் சூரியனில் இருந்து 7,50,000 ஒளியாண்டு தூரத்தில் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்கள் மாயன்கள்.  “நீபுரு“ எனப் பத்தாவது கிரகத்திற்கு பெயரிப்பட்டது என்னவோ தற்காலத்தில் தான், ஆனாலும் பத்தாவதாக கிரகம் ஒன்று இருப்பதைச் சொன்னவர்கள் மாயன்கள்.  



இந்த 'நிபிரு' கோளம் நெருங்கிவந்து பூமியில் மோதும் என்றும், அதுதான் பூமியின் அழிவிற்கு காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள் மாயன்கள். ஆனால், அது எந்த நாள் என்பதுதான் தெளிவாகக் குறிப்பிடவில்லை. எனவேதான்.. மாயன் காலண்டரின் தொடர் கணிப்புக்கள் முடிவுற்ற நாளான ‘21 டிசம்பர் 2012’ தான் அந்த இறுதித்தீர்ப்பு நாள் என உலகம் கருதியது.