Thursday, June 18, 2015

சுற்றும் பூமி, சுற்றும்!

பூமி சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்? ஓன்றும் ஆகாது. அதாவது, ஒன்றுமே ஆகாது. இப்போது ஆகிக்கொண்டிருக்கும் எந்த ஒன்றும், எதற்கும் ஆகாது போய்விடும். புவிவாழ் இனங்கள் - பிணங்கள் என்றாகிவிடும். புவியின் சுற்றுதல் நின்று விட்டால் இதர கோள்களும் தன் இயக்கத்தை நிறுத்திவிடும். கோள்கள் தன் சமநிலை இழக்கும். ஒன்றுடன் ஒன்று மோதும். எல்லாம் முடிந்து விடும்.

ஆனால் அதெல்லாம் எளிதில் நடக்கப் போவதில்லை. ஏனெனில், பூமி சுற்றுவதற்கான ஆற்றலை அது சுற்றுவதிலிருந்தே பெற்றுக் கொள்கிறது. 

நீங்கள் படத்தில் உள்ளது போன்ற ஆடும் வாத்தினைப் பார்த்து இருப்பீர்கள். அழகுப்பொருளாக பல அலமாரிகளில் ஆடிக்கொண்டே இருக்கும். இதன் செயல்பாடு தொடர்ந்து நிகழ்வதினால் பம்பரம் போல மெல்ல.. மெல்ல வேகம் குறைந்த நின்று விடுவதில்லை. மாறாக தொடர்ந்து ஆடிக்கொண்டே.. ஆடிக்கொண்டே இருக்கும். இதன் அறிவியலை நீங்கள் யோசித்ததுண்டா? 

இந்த ஆடும் வாத்தின் உள் இருக்கும் திரவம் தன் சமநிலையை வாத்து ஆடுவதில் இருந்து பெற்றுக் கொள்கிறது. ஆடும் வாத்தோ தன் சமநிலையை உள்ளிருக்கும் திரவத்திலிருந்து பெற்றுக்கொள்கிறது. இந்த வினை ஒன்றுக்கொன்று சார்ந்திருப்பதால்.. ஏதேனும் புற செயல்பாடு இல்லை என்றால் (யாராவது நிறுத்தினால் ஒழிய) நிற்கவே நிற்காது. 

இது போல்தான் பூமியும், இதர கோள்களும் தாங்கள் சுற்றுவதிலிருந்தே தங்களுக்கான சுற்றும் சக்தியைப் பெற்றுக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்ப்போம்.

முதலில், பூமியும் மற்ற கோள்களும் எப்படி அந்தரத்தில்.. எதுவும் தாங்குவதற்கு இல்லாமல் நிற்கின்றன, சுழல்கின்றன எனக்காணலாம். இதற்கும் அறிவியல் செயல்படுகிறது. அது தான் கோள்களின் ஈர்ப்புவிசை. காந்த சக்தி போன்ற விசை. புவியெங்கும் காந்த சக்தியும், காந்தத்தால் ஈர்க்கப்படும் சக்தியும் நிறைந்து உள்ளது. (சிறுபிள்ளையில் மண்ணில் இரும்பெடுத்து.. காந்தத்தால் பேயாட்டி விளையாண்டு இருக்கிறீர்களா?) இந்த சக்தி எல்லா கோள்களிலும் உள்ளது. இதனால் ஒவ்வொரு கிரகங்களும் ஒன்றுக்கொண்று ஈர்க்கிறது. 

பல்வேறு கிரகங்கள் ஓரே சமயத்தில் ஒன்றுக்கொண்டு ஈர்த்துக் கொண்டு இருப்பதனால், ஒரே சயமத்தில் பல்வேறு திசைகளில் இருந்து ஈர்ப்பு சக்தி செயல்படுவதால், எந்த கிரகமும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதில்லை. மாறாக, ஒவ்வொரு கோள்களும் தங்களை தாங்களே ஈர்க்கும் சக்தியில் நின்று கொண்டு அந்தரத்தில் மிதப்பது போன்ற தோற்றத்தை ஏற்ப்படுத்துகிறது. இவ்வாறு ஒன்றுக்கொண்டு ஈர்த்துக்கொண்டு இருப்பதால்தான் இயங்கவும் செய்கிறது.

இவ்வாறு, தொடர்ந்து இயங்குவதால்தான் கோள்களுக்கு ஈர்ப்புசக்தியும் கிடைக்கிறது. (நன்கு தேய்க்கபட்ட சீப்பு, தன்பால் காகிதத்தை ஈர்க்கும் சக்தியை பெருகிறது அல்லவா?). ஆக, இயங்குவதால்தான் ஈர்ப்புசக்தி கிடைக்கிறது. ஈர்ப்பு சக்தி இருப்பதானால் தான் இயங்குகிறது. இது மேற்சொன்ன வாத்து பொம்மையின் இயக்கத்தைப் போன்றது.

கோள்களின் இயங்கும் அறிவியலை பின்வருமாறு புரிந்து கொள்ளலாம். நீங்கள் படத்தில் காட்டியிருப்பது போன்ற எண்களை வரிசைப்படுத்தும் விளையாட்டினைப் பார்த்திருப்பீர்கள்! இதில் உள்ள பதினாறு கட்டங்களை வைக்க வேண்டிய இடத்தில் ஒரு கட்டம் வைக்கப்படாமல் இருக்கும். இந்த ஒரு வெற்றிடத்தை வைத்தே மற்ற கட்டங்களை நாம் அசைக்க முடியும். இந்த வெற்றிடம் இல்லாவிட்டால்.. எதையும் அசைக்க முடியாதல்லவா? 



அது போல், வெளியில் (Galaxyயில்) கோள்களுக்கு இடையேயும் ஒரு வெற்றிடம். இந்த வெற்றிடத்தை நிரப்ப ஒன்றுடன் ஒன்று தன்னைத்தானே ஈர்த்துக் கொண்டிருக்கும் கோள்கள் நகர்கின்றன. ஒரு கோள் நகர்ந்தவுடன்.. அக் கோள் இருந்த இடம் வெற்றிடமாகிறது. இந்த வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள் நகர்கிறது. அதன் வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள்.. அதன் வெற்றிடத்தை நிரப்ப மற்றொரு கோள்.. என தொடர்ந்த இயக்கம் சாத்தியமாகிறது. இந்த வெற்றிடம் இல்லாமல் போகும் நிலை வருவது அவ்வளவு சுலபமல்ல. எனவே வெற்றிடம் இருந்து கொண்டே இருக்கும். கோள்களின் இயக்கமும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆக, ஒன்றும் இல்லாத ஒன்றே (வெற்றிடமே).. எல்லாவற்றையும் இயக்குகிறது. இதனால் தானோ..
                                 பூஜ்ஜியத்தில் இருந்து கொண்டு
                                 புரியாமலே இருப்பான் - ஒருவன்
                                 அவனைப் புரிந்து கொண்டால்
                                அவன்தான் இறைவன் - என பூஜ்ஜியத்திற்கும் இறைவனுக்கும் தொடர்பு ஏற்படுத்தி கண்ணதாசன் பாடியிருப்பார்?

தொடர்ந்து இயங்குவது சரி, அது ஏன் ஒரு சுற்றுப்பாதையில் வட்டமாக சுற்றுகிறது? எப்படி தன்னைத்தானேவும் சுற்றிக்கொள்கிறது? இதற்கான விடையையும் ஒரு விளையாட்டிருந்தே கற்றுக் கொள்ளலாம்.

ஒரு தாம்பாளத்தை சுற்றிவிடுங்கள். அதில் அம்மாவிடம் சப்பாத்திக்கு மாவுபிசையும் போது மாவு கொஞ்சம் வாங்கி (தரவில்லை என்றால் தெரியாமல் எடுத்துக்கொள்ளுங்கள்! 'அம்மாவிடம்' 10% தப்பு செய்தால்.. தப்பில்லை ) தாம்பாளத்தினுள் சிறு துண்டுகளாக பிச்சுப் பிச்சுப் போடுங்கள். தாம்பாளத்தை தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருங்கள். மாவுத்துண்டுகள் மெல்ல மெல்ல உருண்டையாவதையும், தாம்பாளத்தின் சுற்றொடு சுற்றிக் கொண்டே தன்னைத்தானேவும் சுற்றிக் கொள்வதையும் கூர்ந்து கவனியுங்கள்!

இந்த விளையாட்டிலிருந்து தொடர்ந்து சுற்றப்படும் ஒரு வஸ்து, உருண்டைப் பொருளாகவும், தன்னைத்தானே சுற்றும் பொருளாகவும் மாறும் என்பதை அறிந்து கொள்கிறோம்.

இன்றைய கட்டுரையிலிருந்து, தொடர்ந்து பூமி சுற்றிக் கொண்டே இருக்கும் என்பதையும், ஏன் உருண்டையாக இருக்கிறது என்பதையும், ஏன் தன்னைத்தானே சுற்றுகிறது என்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம். இந்த அறிவியிலின் அடிப்படையில்தான் சகல இயக்கமும் தொடர்கிறது என்பதையும் தெரிந்து கொண்டோம்.

ஆனால், தட்சினாயனம்.. உத்திராயனம்? 

No comments:

Post a Comment