Sunday, September 20, 2015

டூம்ஸ் தினம்

சென்ற வாரம் கூட நாம்  மாயன்கள் குறிப்புகளில் சொல்லப்பட்டு, உண்மையில் பலித்தவற்றை கண்டோம். இன்னும் ஆயிரம் ஆயிரம் சம்பவங்கள் அவர்கள் குறித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். ஒவ்வொன்றையும் வெளியிடுதல் சாத்தியமல்ல. இருப்பினும் சென்ற வாரக்குறிப்புக்கள் மிகவும் குறைந்தவையே என்பதால் மேலும் சிலவற்றை காண்போம்.

கரகட்டோ எரிமலை வெடிப்பு 26 ஆகஸ்டு 1883 ( 36ஆயிரம் பேர் பலி)

போர்ச்சுக்கீசிய நிலநடுக்கம் 26 ஜனவரி 1951 ( 30 ஆயிரம் உயிரிழப்பு )

26 டிசம்பர் 1932 ல் சீன நிலநடுக்கம் ( 70,000 பலி )

மீண்டும், சீன நிலநடுக்கம் 26 ஜுலை 1976 (2 லட்சத்து 55 ஆயிரம் பேர் பலி  )

ஷிபாவின் ஆழிப்பேரலையினால் அழிவு 1996 

ஈரானில் நிலநடுக்கம் 26 டிசம்பர் 2003 என நீள்கிறது இந்தப் பட்டியல். இதில் நிகழ்விடம் மற்றும நிகழ்வுகள் தான் மாயன் இனத்தவரின் குறிப்புகள் ஆகும். அதன் இழப்பின் மக்கள் தொகை நிகழ்ச்சி நடந்தபின் கிடைத்த தகவல்களே!

மாயன்கள் கணிப்புக்கள் எல்லாம் இயற்கை சார்ந்தவை. அவர்கள் காலண்டர்களின் கணிப்புத்துவங்கி கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரையிலான இயற்கையின் பெருஞ்சீற்றங்களை அவர்கள் துல்லியமாக சொல்லிவைத்துச் சென்றிருக்கின்றனர். எட்டுக்கும் மாயன்களுக்குமான தொடர்பெல்லாம் மிகச் சொற்பமானவையே. உண்மையில் அவர்கள் அதற்கும் பலமடங்கு கணித உயரத்தை எட்டியவர்கள்.

அவர்களின் காலண்டர் சுற்றுத்தான் கணக்கிடல்களில் மிகச் சரியானது. சூரியச் சுற்றை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்கள். அவர்கள் காலண்டர்கள் திரும்பத்திரும்ப நிகழும் நாட்களின் வரிசைக்கிரமம் இல்லை. தொடர்ந்து நிகழும் வெவ்வேறு அமைப்புகளுன் கூடிய நாட்களைக் கொண்டவை. இத்தகைய காலண்டர் அமைப்பு உலகில் வேறு எங்கிலும் இல்லை. ஏன் நம்மிடத்தே கூட இல்லை.

அவர்கள் எகிப்திய, கிரேக்க காலண்டர்களுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர்கள். மாயன் காலண்டர்களில் விவசாய அடிப்படையிலான குறிப்புக்கள் இல்லை. எனினும், கிரகங்களின் ஈர்ப்பு மற்றும் சூரிய சுற்றுக்களினால் ஏற்படும் புவியியல் மாற்றங்களைச் சரியாகக் குறித்துள்ளனர். வழிபடுதலும் மாயன்களின் வழக்கம்; என்பதால் அமானுஷ்ய வடிவமுள்ள தெய்வச்செயல்பாடுகளைக் கொண்ட குறிப்புக்களும் அவர்கள் காலண்டரில் காணப்படுகின்றன.

நட்சத்திரங்களின் இடப்பெயர்ச்சி பற்றியும், கோள்களின் சஞ்சாரம் பற்றியும் அவர்கள் அறிந்து வைத்திருந்தனர் அதைக்கொண்டே, பூமியில் நடைபெறும் இயற்கைச்சீற்றங்களைக் கணித்து வைத்திருந்தனர். 

நவீன கணிதங்களின் கண்டுபிடுப்புகளும், தொலைநோக்கிகளும் இல்லாத காலத்திலேயே.. ஒவ்வொரு கோள்களுக்குமான இடைவெளி தூரம், சூரியனுக்கும் கோள்களுக்குமான இடைவெளி தூரம் போன்றவற்றை அவர்கள் சரியாகக் கணக்கிட்டிருப்பது ஆச்சரியம்தான். இந்த தூர வெளிக்கணக்குகள் 99.45% துல்லியமானவை என ‘நாசா’ உட்பட பல்வேறு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கோள்கள் மட்டுமின்றி சூரிய அமைப்பையும், அந்தச் சூரியனில் மத்தியில் காணப்படும் கரும்புள்ளிகள் பற்றிய முதற்குறிப்பை மாயன்களே உலகிற்குத் தெரியப்படுத்தினர். 

மாயன்களின் கணிப்புகள் தற்போதைய காலம் வரை சொன்னது சொன்னபடி நிறைவேறித்தான் வந்தது. அந்த மாயனின் காலண்டர் கணிப்புக்களில் மிக முக்கியமானதாக கருதப்பட்ட ‘21 டிசம்பர் 2012’ல் உலகம் அழிந்து போகும் என்ற விசயம்தான் பொய்த்துப்போனது.

அந்த 21 டிசம்பர் 2012 நாளை ‘டூம்ஸ் டே’ என அறிவியலாளர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ‘டூம்ஸ் டே’ என்பது மாயன்காலண்டர்களின் கணிப்புக்களின் குறிப்புக்கள் இறுதி பெற்ற நாள். எனவே, இந்த நாள் வரை மட்டுமே குறிப்புக்கள் நீள்வதால்.. இந்தநாளில் உலகில் நீட்சியும் முடிந்து போகும் என்று சிலர் கதைகட்டினார்கள். பலர்; அதை நம்பவே செய்தார்கள். 

ஆனால், உண்மையில் மாயன்கள் இந்த நாளை இறுதிநாள் என உறுதியாகக் குறிப்பிடவில்லை. மாறாக அவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டுவந்த கணிப்புக்களும், நிகழ்செய்திகளும் இந்த நாளில் முடிவடைந்திருந்தது. ஒருவேளை அவர்கள் வேறொரு கணிப்பை இதைத்தொடர்ந்து வெளியிடலாம் என்றிருந்திருந்திருக்கலாம். கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து இயற்கைச்சீற்றங்களைக் கண்டுகுறித்தவர்கள், அடுத்த குறிப்பை வெளியிட சற்று இடைவெளி எடுத்துக் கொண்டிருக்கலாம். அந்த இடைவெளியில் அவர்கள் இனம் அழிக்கப்பட்டிருக்கலாம். அல்லது, அவர்கள் வெளியிட்டிருந்த அடுத்த பட்டியல் நமது கையில் கிடைக்காமல் இருந்திருக்கலாம்.

ஆக, நமக்கு கிடைத்த தகவல்படி சென்ற 2012 டிசம்பர் 21 அன்று.. ‘டூம்ஸ் டே’ என்று அழைக்கப்படுகிற நாள் அன்று.. உலகம் அழியவில்லை. எனவே, அன்று உலகம் அழியும் என்று மாயன்கள் குறிப்பிட்டு இருக்கவில்லை.