Monday, May 9, 2016

சுமேரியர்கள் 3

ஆரம்ப கால நதிக்கரை நாகரீகங்கள் உலகின் பலபகுதியிலும் பரவி இருந்து இடத்தால், மொழியால், வாழ்ந்த மனிதர்களின் நிறத்தால் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகளில் பலவற்றில் ஓரளவிற்கு சம அறிவினர்களாகவே இருக்கிறார்கள் என்பது அவர்தம் எச்சமிச்சங்களைக் கொண்டு நாம் அறிகிறோம்.



உலகமுழுவதும் உள்ள நாகரீகங்கள் அனைத்தும் சற்றேரக்குறைய சமகாலத்தில் ஆற்றங்கரைச் சமவெளியில் காலூண்றியவையே. இவை ஆற்றங்கரையில் அமைந்ததன் காரணம் விவசாய வசதிக்காகத்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அவர்களின் வற்றாத உணவுத்தேவை வேட்டையாடி சமூகத்தில் முழுமையாக நிரம்பப்படவில்லை, மேலும் பருவகால மாற்றங்களில் உணவுகிடைப்பது துர்லபமாய் இருந்தது. உணவு கிடைக்காத சமயங்களுக்காக சேமிக்கத்துவங்கினர். சேமித்த தாவர வித்துக்கள் திரும்ப முளைக்கத்துவங்கின. இதனைக் கூர்ந்து நோக்கிய மனிதன் விவசாயத்தை அறிந்தான். இந்த விவசாயத் தேவையே அவர்களை இன்ன பிற கண்டுபிடித்தலுக்கும் முன்னெடுத்துச் சென்றது எனலாம்.
நாகரீகத்தைக் கண்டடைந்த மக்கள், ஆண்டு முழுவதும் விவசாயம் செய்வதற்காக ஒரே இடத்தில் தங்க ஆரம்பித்தனர். தங்குவதற்கு சிறு குடில்கள் முதல் பெரும் கட்டிடங்கள் வரை கட்டிக்கொண்டனர். குழுக்களாக பிரிந்த வாழ்ந்த அவர்கள் தங்களுக்கென அரசு முதல் அரண்கள் வரை அமைத்துக் கொண்டனர்.
விளைச்சலை எதிர்நோக்கும் பொருட்டு இயற்கையை கண்காணித்தனர். இயற்கையினை தொடர்ந்து கண்காணிக்க அவர்கள் காணும் ஒவ்வொரு பொருளி்ற்கும் அளவீடு தேவை
தான் கண்காணித்ததை ஏனையோருக்கு பகரும் பொருட்டுப் குறிப்பெடுத்தனர். இந்த கணக்குகள் குறிப்புகள் காலண்டராயின.
சுமேரியர்கள் புராதணசின்னங்களையும், நம்மைப்போலவே புராணங்கள் பலவற்றையும் கொண்டவர்கள் எனக்கண்டோம். அவர்களின் “ஊர்“ எனும் ஊர் மிகப்பெரிய நகரமாக இருந்தது. அந்த நகரில் தான் பைபிலில் குறிப்பிடப்படும் “ஆபிரகாம்“ எனும் ஆதிகால மனிதன் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இந்த நகரில் கி.மு.2100 வாக்கில் “நம்மு“ என்ற மன்னன் ஆண்டுவந்தான். இவனது காலத்தில் சந்திரனுக்கு என “சிகுரத்“ என்னும் கோயில் கட்டப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. சுமேரியர்கள் சந்திரனை “நன்னா“ என்று அழைத்தனர். இந்த நன்னா எனும் சந்திரனுக்கான கோவிலே.. லுனார்காலண்டரினைப் பிரதிபலிப்பதுபோன்ற தோற்றத்தில் உள்ளது. மேலும் இக்கோவிலின் கட்டுமானங்கள் சற்று எகிப்திய மற்றும் இந்திய பாரம்பரியங்கள் இணைந்த கட்டிட அமைப்பில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர்களில் வியக்கவைக்கும் சித்திர கலை வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.



கணக்குகளைப் பொருத்தவரையில், அதற்கு முன்பு இருந்தவர்களுக்கு மாற்றாக. தங்கள் கைவிரல்களின் அடிப்படையில் பத்து பத்து எண்களாக பலவற்றைக் கணக்கிட அறிந்து வைத்திருந்தனர். ( மாயன்களின் அடிப்படை எண்கள் இருபத்திநான்காகவும், சீனர்களின் அடிப்படையெண்கள் 12, 15 என பலவாறு வந்ததையும் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்) இந்த கணக்குகளின் முதன்மைபோல.. எழுத்து உருவம் கண்டுபிடிப்பிலும் முதன்முதலாக அனைத்து வரலாற்று ஆசிரியர்களும் ஏற்றுக்கொள்ளும் பதிவுறு சாதனையைப் புரிந்தது.. சுமேரியர்களே ஆவர்
இவர்களது எழுத்து அமைப்பு “ஹாப்பு“ என்று அழைக்கப்படுகிறது. இதன் வடிவமும் இந்தய அமைப்பை ஒத்து இருப்பதாக அறியப்படுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் எழுத்து அமைப்பை ஒத்ததாக உள்ளது. மேலும் குறிப்பாக.. சுமேரியர்களின் ஆதிமனிதர்கள் வாக்கியமான  “கி ரி கி பட் டு ரி யா“  என்ற வாக்கியமே குமரிக்கண்டம் எனும் தமிழர் பகுதியைக் குறிப்பது ஆகும். இதன் அக்கால தமிழ் உச்சரிப்பு “ ரி ட“ ஆகும். சுமேரியர்கள் ஒருசமயம் நமது குமரிக்கண்டம் எனும் லெமூரியா கடல் மூழ்கியபோது வடமேற்கிற்கில் நகர்ந்து குடியமர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற கருது கோள்களும் உள்ளது. எது எப்படியாயினும் உலகில் முதன்முதல் எழுதப்பட்ட மொழி சுமேரியம் என்றும், அது கி.மு. 3100-ல் எழுத்துமொழியாய் வழங்கியதற்குச் சான்றுள்ள தென்றும் பிரித்தானியக் கலைக்களஞ்சியத்திற் கூறப்பட்டுள்ளது.
அதன்பிற்காலத்திலும் சுமேரியர்கள் நாவாய்கள் மூலம் இந்திய கடல் பரப்பில் கோலோச்சினர் எனவும்.. இந்தியர்களுடன் குறிப்பாக தமிழர்களுடன் கடல்சார் வாணிபத்தில் ஈடுபட்டனர் எனவும் குறிப்புகள் உள்ளன.
இதையெல்லாம் கொண்டு ஒப்பு நோக்கும் போது, தமிழர்கள்களாகவோ அல்லது தமிழர்களுக்கு இணையானவர்களாகவோ.. சுமேரியர்களைக் கருத வாய்ப்பிருக்கிறது. கலாச்சார அடிப்படையிலும் வாழ்க்கை முறை அடிப்படையிலும் சுமேரியர்கள், ஆதித்தமிழர்களுடன் ஒத்தவர்களாகவே இருந்திருக்கின்றனர். மாடுகளை ஏர் என்னும் உழவுக்கருவியில் இணைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தியது முதல்.. விவசாய விளைபொருளை முதல்முதலாக இனிப்புடன் சேர்த்து சமைத்து சூரியக்கடவுளுக்கு படைக்கும் பழக்கமும் அவர்களுக்கு இருந்து இருக்கிறது.

இவ்வளவு இணைந்த அவர்கள்.. காலண்டரை எப்படிக் கணக்கிட்டார்கள்? அவர்கள் காலண்டரின் முதல்மாதம் எது?